என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!

>> Saturday, May 1, 2010

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!

தொண்ணுறு நிமிடங்கள் தொட்டு அணைத்த காலம் தான்!
எண்ணுறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி!

பார்வையிலே சில நிமிடம்! பையத்தோடு சில நிமிடம்!
கட்டி அணைத்த படி கண்ணிரில் சில நிமிடம்!
இலக்கணம்மே பாராமல் எல்லா இடங்களில் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!


எது நியம் எது பாவம் இருவருக்கும் தோண்றவில்லை!
அது இரவா அது பகலா அதுபத்தி அறியவில்லை!
யார் தொடங்க! யார் முடிக்க ! ஒரு வழியும் தோண்றவில்லை!
இருவருமே தொடங்கி விட்டோம்! இதுவரைக்கும் கேள்வி இல்லை!
அச்சம் கலைந்தேன்! ஆசையில் எனை நீ அணைத்தாய்!
ஆடை கலைந்தேன்! வெட்கத்தை நீ அணைத்தாய்!


கண்ட திரு கோலம் கனவாக மறைந்தாலும்!
கடைசியில் நீ அழுத கண்ணீர் இன்னும் கையில் ஓட்டுதடி!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP