என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்

தமிழக அரசு பேருந்தில்

>> Friday, September 17, 2010

தமிழக அரசு பேருந்தில் பயணம் சென்றால் திருக்குறளை மிஞ்சிய ஒரு வாசகம் பார்க்கலாம் அது யார் எழுதுனா என்று நீங்காளே கண்டுபிடிச்சிகிங்கோ அவ்வாசகம்...

" நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது...நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும்" என்று இருக்கும்.

ஏன், நாம் என்பதற்கு பதில் "நாங்கள்" என்று சொன்னால் கூட உதடுகள் ஒட்டாதே..."நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும்" இது யாரை ஏமாத்துற வேல ஒற்றுமை என்ற பேருல ஓட்டுக்காக மொத்தமா உட்காரவச்சு கும்மியடிக்கிற வேலை......

தன்மானம் இழந்த தமிழனுக்கு பழமொழில கூட பாசாங்கான வார்த்தைகள்தான் வெளிபடுகிறது.ஆமா இதை யாரு எழுதினா என்று சொல்லலியே...
ஒரு டிப்ஸ் தரேன் கண்டுபிடியுங்க...காலையில டிபன் சாப்பிட்டு மத்தியானம் சாப்படுவரை உண்ணாவிரதம் இருந்த ஒரு உத்தமர்...?????

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP