என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்

சாதனை - வேதனை

>> Tuesday, December 14, 2010

வாழ்க்கையில் சாதனை படைத்து விட்டேன்
என்பதை விட
யாரயும் வேதனை படுத்தவில்லை
என்பது தான் மிக பெரிய சாதனை

Women are women, men are men

>> Sunday, November 21, 2010

"We will have a more beautiful world if all women are allowed to grow their talents, their genius.
It is not a
question at all…
nobody is higher,
nobody is lower.
Women are women,

men are men;
they have differences,
but differences don’t make anybody
higher or lower.
Their differences create their attraction."

- OSHO

Responsibility

>> Monday, November 15, 2010

Stand Up, be Bold, be Strong. Take the whole responsibility on your own shoulder. But….Don’t missed your inner peace. The inner peace will give more results for your responsibilities.

Consciousness is the only reality

Existence or Consciousness is the only reality. Consciousness plus waking we call waking. Consciousness plus sleep we call sleep. Consciousness plus dream, we call dream. Consciousness is the screen on which all the pictures come and go. The screen is real, the pictures are mere shadows on it.

Children can laugh - Adults???

>> Tuesday, November 9, 2010

No commitments
No Demands.... For Children...So they can laugh...


No adjustments
No tolerance
No sacrifice......For Adults...
So they Can’t laugh ........

We are overloading our heads in the name of duty...






‎"Children smile 400 times a day on average ... adults 15 times.

Children laugh 150 times a day ... adults 6 times per day.

Children play between 4-6 hours a day ... adults only 20 minutes a day."

மிச்சம், எச்சம், உச்சம்

உணர்ச்சியின் உச்சம் புனிதம். புனிதத்தின் எச்சம் மிச்சம். மிச்சம் = நான்

குரான் வாக்கியம் :

குரான் வாக்கியம் : "உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களுக்குள் சிலர் சிலருடன் யுத்தம் புரியும்படி செய்யவும் அவன் சக்தியுடையவனாக இருக்கிறான்." (6-65)

Enlightened Diwali

>> Wednesday, November 3, 2010

The earthen lamp of the EGO is the only darkness.
Blow out this lamp and see: That which remains, That alone is unearthly, That alone is consciousness

Self......

>> Tuesday, November 2, 2010

There is no you, nor I, nor he; no present, nor past, nor future. It (Self) is beyond time and space, beyond expression. It is ever there.

Life Cycle

>> Monday, October 25, 2010

We all have return tickets when we are born. We don’t know the date of journey. Yesterday is cancelled Check. Tomorrow is promissory note. Today is ready cash. So do the best each and every moment….

அறிவு

>> Sunday, October 24, 2010

அறிவு மதத்தால் சுரண்டப்பட்டு கொண்டு இருக்கிறது. செல்வம் மோட்சத்தின் பேராலும், பாவ மன்னிப்பின் பேராலும், புண்ணியத்தின் பேராலும் சுரண்டப்பட்டு கொண்டு இருக்கிறது.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்ககூடதா??

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று வேறு எழுதி வைத்துக் கொண்டு பயமுறுத்துகின்றான். கோயில் இல்லாத ஊரில் அறிவு வளர்ச்சி ஏற்படும். அங்கு - மூடநம்பிக்கைகள் இருக்காது. எனவே நம்மை மடையனாக்க வேண்டும் என்பது அவர்களின் குறிக்கோள். அதனால் இப்படிக் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.

Smile + Silence = Success

Successful people always have two things in their lips. One is smile another one is silence..!!

Money-oriented Life

"One of the greatest problems that money creates is that you never know whether you are loved or your money is loved, whether you are desirable or your money is desirable. Our whole attitude about life is money-oriented. And money is one of the most uncreative things one can become interested in."- OSHO

அன்பும் --- ஆணவமும்

>> Wednesday, October 20, 2010

பெரியவர் தான் பெரியவர் என்ற
நினைப்பைக் கொண்டிருக்காவிட்டால்
பெரியவர்க்கும் சிறியவர்க்கும் நட்பு சாத்தியமே


பெரியது எப்பொழுதும் தனது
ஆணவத்தையே முக்கியமாகக் கருதும்.
ஆனால் அன்பிற்கு
சிறியது பெரியது என்று எதுவும் கிடையாது.

நெருங்கிவரும் எவரையும்தழுவிக் கொள்வது அன்பு.


அன்பு எப்போதும் வளைந்து கொடுக்கத் தயாராயிருக்கும்
ஆணவம் ஒருபோதும்வளைந்து கொடுக்காது.


நீ ஆணவத்தை நெருங்கினால்
அதன் கிளைகள் இன்னும்
எட்டமுடியாமல் மேல்நோக்கி நீளும்.
அது நீ அதை நெருங்க
முடியாதபடி விரைத்து நிற்கும்.


எப்பொழுதும் எதையாவது கொடுக்க
முடியும் போது சந்தோஷப்படுவது அன்பு.

எப்பொழுதும் எதையாவது பெற
முடியும்போதுசந்தோஷப்படுவது ஆணவம்.

அமெரிக்கா வெறும் கைக்குழந்தைதான்

அமெரிக்காவானது நாடு என்று பார்த்தால் அதற்கு 300 வருடங்கள் மட்டுமே ஆகிறது. எனவே அந்த 300 வருடங்கள் என்பது பெரிய விஷயம் அல்ல. எனவே அமெரிக்காதான் இந்த உலகின் மிகப்பெரிய அபாயம். குழந்தைகளின் கையில் அணுஆயுதங்கள்........ ரஷ்யா கொஞ்சம் அதிக பகுத்தறிவுடன் நடந்து கொள்ளும். அது ஒரு வயதான பழமை வாய்ந்த நாடு. மேலும் அதற்கு ஒரு நீண்ட வரலாற்றின் அனுபவமும் உள்ளது. அமெரிக்காவிற்கு என்று எந்த சரித்திரமும் கிடையாது. அங்குள்ள ஒவ்வொருவரும் அவர்களின் தந்தையின் பெயர், தந்தையின் முன்னோர்கள் பெயர் ஆகியவைதான் தெரியும். அவ்வளவுதான். அங்கே அவர்களின் குடும்ப மரத்தின் கிளைகள் நின்று விடும்.

அமெரிக்கா வெறும் கைக்குழந்தைதான். சரியாக சொன்னால் கைக்குழந்தை கூட அல்ல. அது இன்னும் கருவறையில்தான் உள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் உள்ள சமுதாயங்களோடு ஒப்பிடும்போது, அமெரிக்கா இப்போதுதான் கருவுற்றிருப்பது போன்றது. எனவே, இந்த மக்களிடம் அணு ஆயுதங்களைக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது.

We celebrate everything

>> Friday, October 15, 2010

We celebrate everything.Celebration is our way to receive all the gifts from God. Life is his gift,death is his gift;the body is his gift,the soul is his gift.We celebrate everything. We love the body,we love the soul.We are materialist spiritualists.Nothing like this has ever happened in the world.This is a new experiment,a new beginning,& it has a great future."

Best Sentences use for life

"A proper spiritual approach for changing the behavior of man and establishing World Peace is Karma Yoga"


"The three main ways in which man wastes his energy are Greed, Anger and Worry.
Man's needs and achievements must be compatible to and in accordance with the purpose of his birth"


"An integrated practice of reorganising and restructuring the body and the mind for a newly planned life is kundalini yoga"


"Whatever an action may be, there is a result. And for every result there is an action or cause. This is the cause and effect system which never fails. To live in harmony, do not command, do not comment, and do not demand"

நஷ்டமேது? - இக்கவி பிறந்த கதை

>> Tuesday, October 12, 2010

"வந்ததுதான் போகுமேயல்லாது

வருமுன்னே இருந்த ஒன்று போவதுண்டோ?

இந்த உண்மை எண்ணி எண்ணி உணர்ந்து கொண்டால்

எவருக்கும் எப்போதும் நஷ்டமேது?"



மஹான் (வேதாத்ரி மகரிஷி) தனது குடிசையின் எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த போது [செல்வந்தராய் இருந்து எழையாகி இட்டிலி சுட்டு விற்று பிழைப்பை நடத்திய காலத்தில்] கூடுவாஞ்ச்சேரியில் வீசிய புயல் காற்றில் இருந்த ஒரே ஒரு குடிசையும் அடித்துக் கொண்டு போக, அதைக் கண்டு விசனமுற்று அன்னை லோகாம்பாள் அழத் துவங்க, மகானோ துளியும் துக்கமின்றி பாடுகின்றார்........

விழிப்புணர்வு - தன்நினைவு (Self Remembering)

>> Monday, October 11, 2010

முதலில் விழிப்புணர்வு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். அப்போது நீங்கள் அனேக விஷயங்களை அறிகிறீர்கள். – அதாவது கடைகள், உங்களை கடந்து செல்லும் மக்கள், அங்குள்ள போக்குவரத்து இப்படி எல்லாவற்றையும் உணர்கிறீர்கள். நீங்கள் அனேக விஷயங்களை உணர்கிறீர்கள். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உணர்வதில்லை. – அதுதான், உங்களைப் பற்றி. நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது அநேக விஷயங்களை உணர்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்களை உணர்வதில்லை!. தன்னைப் பற்றிய இந்த விழிப்புணர்வினை ஜார்ஜ் குருட்ஜிப் தன்நினைவு (Self Remembering) என்று அழைக்கிறார். “இடைவிடாமல், நீங்கள் எங்கிருந்தாலும், உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.” என்று குருட்ஜிப் கூறுகிறார்.



நீங்கள் என்ன செய்தாலும், ஒரு விஷயத்தை மட்டும் இடைவிடாமல் உங்களுக்குள் செய்து கொண்டு வாருங்கள்; நீங்கள்தான் அதைச் செய்கிறீர்கள் என்கின்ற விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் சாப்பிடுகிறீர்கள் – உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் நடந்து செல்கிறீர்கள் – அப்போது உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் மற்றவர்கள் சொல்வதை கவனிக்கலாம். நீங்கள் பேசலாம். – எதுவாக இருந்தாலும், உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் கோபப்படும்போது நீங்கள்தான் கோபப்படுகிறீர்கள் என்று விழிப்புணர்வு கொள்ளுங்கள். இப்படி இடைவிடாமல் நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது, ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தியை உங்களுக்குள் உருவாக்குகிறது. நீங்கள் ஒன்று திரண்ட ஒரு உயிராக இருக்க ஆரம்பிக்கிறீர்கள்.

குறள் - திருக்குறள்

"திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து)
அறனல்ல செய்யாமை நன்று"
குறள் 157

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தந்
தகுதியான் வென்று விடல்."
குறள் 158

"இன்னாசெய் தாரை யொறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."
குறள் 314

சுகம் என்பது யாது?

>> Saturday, October 9, 2010

இதைச் சரியாக அறிந்து கொள்ளாததால் தான் மக்கள் சுகத்திற்காகப் பற்பல துறைகளிலும் தம் முயற்சியைச் செலுத்தி வருகின்றனர். சுகம் என்பது ஆன்மாவே. ஆன்மாவின் இயல்பே சுகம். உண்மையில் நாம் ஆன்மாவே. நம் இயல்பு சுகமே. ஆயினும் தாம் ஆன்மாவே என்றறியாமல் தம்மை உடலாகக்கருதியிருப்பதால்தான் மக்கள் சுகத்தை யிழந்தவர்களாகவும் துன்புறுபவர்களாகவும் அவசியமின்றிக் கவலைப்படுகிறார்கள். இழந்ததாகத் தோன்றும் நம் சுகத்தை மீண்டும் அடைவதற்கு, மறந்ததாகத் தோன்றும் நம் உண்மை யியல்பை- ஆன்மாவை-அறிவதொன்றே போதும்.

யார் தங்களை அடித்தவன்

"பகவானே,
இவர்களுள் யார் தங்களை அடித்தவன்; காட்டுங்கள்!"
என்று அவர்கள் வேண்டினர்.
"நான் யாரை(முன் ஜன்மத்தில்) அடித்தேனோ
அவன் தான் என்னை அடித்தான்!
அவனை நீர் கண்டுபிடியும்!! "

அவரவர் பிரரப்தப் பிரகாரம் - ரமண மகரிஷி

அவரவர் பிரரப்தப் பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன்.
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என்ன தடை செய்யினும் நில்லாது.
இதுவே திண்ணம்.
ஆதலின் மௌனமாயிருக்கை நன்று

விவாதம் - பாதிப்பு உண்டாக்கும் (நிழலுடனே போராடுவதற்கு நிகராகும்)

>> Friday, October 8, 2010

****
ஓவ்வொரு விவாதத்தின் பின்னும் -ஒருவருடைய அறிவீனம் இருக்கிறது.(லூயிஸ் பிராண்டர்ஸ்)
****


****
உன்னை திட்டுபவர்களையும்,
எரிச்சல் மூட்டுபவர்களிடமும்,
விவாதம் செய்தால்,
உன் உடலுக்கும்,
மனதுக்கும் தான் வீண்பாதிப்பு உண்டாகும்.
****


****
நமக்கு எந்தவகையிலும் உதவாத செய்திகளையும்,
கதைகளையும்,விவாதங்களையும்,
பொழுது போக்குகளையும்,
முடிந்தவரையில் விலக்கி விடுங்கள்.
இவற்றுக்காகச் செலவிடும் நேரங்களைப் பயனுள்ள ஆக்கச் சிந்தனைகளுக்குச் செலவு செய்யப் பழகுங்கள்.
****


****
மனிதன் விவேகமான மிருகமாக இருப்பதை விட
விவாதம் செய்யும் மிருகமாகவே இருக்கிறான்.(அலெக்சாண்டர் ஹேமில்ட்டன்)
****

மரணம் எப்படி நிகழ வேண்டும்?

>> Thursday, October 7, 2010

மரணம் என்பது கால நிகழ்வு. உடல் என்கிற சட்டையை விட்டு ஆத்துமா (ஜீவன்) வெளியோரும் ஒரு உன்னத நிகழ்ச்சி.
இது ஆத்துமா அல்லது உடலுக்கு வலி இல்லாத நிகழ்வாக இருக்க வேண்டும்.

எப்படி மரத்தில் இருந்து காய்ந்த இலை விழுகிறதோ அது போல இருக்கவேண்டும். காய்ந்த இலை விழும்போது மரமும் வலி அறியாது, இலையும் வலி அறியாது....மெல்ல மெதுவாய் காற்றிலே அசைந்தாடி .........மரண காயம் இல்லாமல்...!!!!

கீதாசாரம்.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.


உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுததாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

மரணம் எப்படி நிகழும் ?

மரணம் எப்படி நிகழும்?
உடலில் தினமும் ஆயிரகனக்கான செல்கள் சாகின்றன, புதிய செல்கள் பிறக்கின்றன. செல்கள் பிறக்கின்ற என்ணிக்கை குறைந்து சாகின்ற என்ணிக்கையை அதிகம் ஆகும் போது மரணம் நிகழும். மரணம் என்பது உடலில் இயக்க ஆற்றல் நின்றுபோதல் ஆகும்.

உன்னிடம் இருந்தால் திருத்திகொள்

>> Tuesday, October 5, 2010




நான் யார்? - ஓஷோ

>> Thursday, September 23, 2010

நான் என்பது என்ன நீ இதைப் பற்றி அமைதியாக சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா அது உன்னுடைய காலா, கையா, அல்லது உன்னுடைய இதயமா, தலையா அல்லது இது வெறும் அகங்காரமா?

எது உன்னுடைய ‘ நான் ‘? எங்கே உன்னுடைய ‘ நான் ‘? உன்னுடைய ஆணவமா?
அது அங்கிருத்தலின் உணர்வு இருக்கிறது, ஆனாலும் அதை குறிப்பாக எங்கேயும் காண முடியவில்லை. மௌனமாக ஒரு நிமிடம் அமர்ந்து அந்த ‘ நானை ’ தேடிப் பார். நீ ஆச்சரியமடைவாய். எவ்வளவு ஆழமாக தேடினாலும் உன்னை எங்கும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் ஆழமாக தேடும்போது ‘ நான் ‘ என்று ஒன்று இல்லை என்பதை உணர்வாய். அது போல ஆணவம் என்பதும் கிடையாது. சுயத்தின் உண்மை அங்கிருக்கும்போது ‘ நான் ‘ அங்கிருக்காது.

எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற ஞானியை அப்போதிருந்த மாமன்னன் மாலிண்ட் தனது அரசவைக்கு அழைத்தான்.

தூதுவன் நான்சென்னிடம் சென்று, “குரு நான்சென் அவர்களே, அரசர் உங்களை காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்.” என்றான்.
நான்சென், “நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் நான்சென் என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு.” என்றார்.

தூதுவன் அரசரிடம் சென்று நான்சென் ஒரு வித்தியாசமான மனிதர், அவர் வருவதாக ஒத்துக் கொண்டார், ஆனால் நான்சென் என்று யாரும் இல்லை என்று அவர் கூறியதைக் கூறினான். மாமன்னன் ஆச்சரியமடைந்தான்.

நான்சென் வருவதாக கூறிய நேரத்தில் தேரில் அழைத்து வரப் பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, “குரு நான்சென் அவர்களே, வாருங்கள், வாருங்கள்!” என வரவேற்றான்.

இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். “நான்சென்னாக நான் உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற பெயருடைய யாரும் இங்கு இல்லை.” என்றார்.

அரசன், “நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள், நீங்கள், நீங்கள் இல்லை என்றால் யார் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?” என்று கேட்டான்.

நான்சென் பின்னே திரும்பி பார்த்து கேட்டார், “நான் வந்த ரதம் அதுதானே?”

“ஆம், அதுவேதான். இதுதான்”

“தயவுசெய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்” என்றார்.

அது செய்யப்பட்டது.

குதிரைகளை காட்டி, “அது ரதமா?” என்று கேட்டார் நான்சென்.

அரசர், “குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?” என்று கேட்டார்.

துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும் நுகத்தடி கழற்றப்பட்டது.

“அந்த நுகத்தடிதான் ரதமா?” என்று துறவி கேட்டார்.

“அது எப்படி?, அவை நுகத்தடிகள், அது ரதமல்ல.”

துறவி கூற கூற, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டது, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, பட அரசரின் பதில் ‘ இது ரதமல்ல ‘ என்பதாக இருந்தது.
கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை.

துறவி, “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப் பட்டபோதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார்.

அரசரிடம் ஒரு நிலைமாற்றம் நிகழ்ந்தது.

துறவி தொடர்ந்தார், “நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே
உனது ‘ நான் ‘?.

நீ எங்கேயும் ‘ நானை ‘ கண்டு பிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார், உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று, இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும்.

பில் கேட்ஸ் (William Henry Bill Gates ) -

பில் கேட்ஸ் (William Henry Bill Gates ) என்றால் இன்றைய உலகில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எவரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருளாரும், அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆன பில் கேட்ஸின் தற்போதைய வயது 52.


உலக பணக்காரர்கள் வரிசையில் “பில் கேட்ஸ்” தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்திலேயே இருந்து வருகிறார். 1999 களிலேயே இவரது சொத்தின் மதிப்பு 100 பில்லியன்கள் ஆகும். இன்று இவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் உலகெங்குமாக 78,000 பேர்கள், 105 நாடுகளில் சேவை புரிகின்றனர்.வாழ்க்கை வரலாறுபில் கேட்ஸ் 1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் நாள் அமெரிக்கா, சியேட்ல், வொசிங்டன் (America, Seattle, Washington) எனும் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் 'வில்லியம் கெச் கேட்ஸ்' அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஆவார். தாயாரின் பெயர் 'மேரி மேக்ஸ்வெல்' வொசிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியை ஆவார். இவர்களின் மகனான பில் கேட்ஸ் சிறு வயதிலேயே கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கியுள்ளார்.

பில் கேட்ஸ் தனது பதி்மூன்றாவது வயதில் சியாடில் பகுதியில் சிறந்தப் பாடசாலையான லேக்சைட் பாடசாலைக்கு மாற்றம் பெற்றார். அங்கு கல்வி கற்கும் காலங்களில் இவரது கணனி ஆர்வமும் திறைமையும் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டது. சிறு வயது முதலே மென்பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவரானார்.13 வயதான அக்காலத்திலேயே மென்பொருள் எழுதவும் தொடங்கிவிட்டார்.


1973 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) சென்றார். அங்கே இஸ்டீவ் பாள்மர் என்பவர் இவரது நண்பரானார். இஸ்டீவ் பாள்மரின் வீட்டில் இருந்தே படித்தார். இருப்பினும் இவரது ஆர்வம் கணனி மென்பொருள் எழுதுவதிலேயே இருந்தது.



1975 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகக் கல்வி முற்று பெற்றப் பின் தனது சிறு வயது நண்பரான பவுல் எலன் (Paul Allen) என்பவருடன் இணைந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். கணனித்துறை பிற்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனும் தீர்க்கத்தரிசனம் இவருக்குள் இருந்ததோ என்னவோ, இவரும் இவரது நண்பரும் இணைந்து மென்பொருள்களை மும்முரமாக எழுதினர். இவருடைய இத்தொலை நோக்குச் சிந்தனைத்தான் பிற்காலத்தின் இவருடைய அபார வெற்றிகளுக்கு வழிவகுத்தது எனலாம்.இன்றை உலகில் சாதாரணக் கணனி பாவனையாளர் முதல் அலுவலகங்கள், நிறுவனங்கள் வரை மைக்ரோசொப்ட்டின் மென்பொருள் இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. கணனி இயங்குத் தளங்களை (ஒப்பரேடிங் சிஸ்டம்) பொருத்தவரையிலும் 85% சதவீதமானவை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்கு தளங்களாகவே உள்ளன. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் "விண்டோஸ் XP" ஒரு புரட்சியையே ஏற்படுத்திய இயங்கு தளமாகும். மைக்ரோசொப்ட்டின் கடைசியான இயங்குதளமான “விண்டோஸ் விஸ்டா” 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதனைக் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள், 600 கோடி டொலர்கள் செலவில், 5000 கணனி மென்பொருள் வல்லுநர்கள் உழைப்பில் உருவாகியுள்ளது. இதில் 300 இந்திய கணனி மென்பொருள் வல்லுநர்களும் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.இன்றையக் கணனி உலக நுட்ப வளர்ச்சிக்கும், அறிவியல் மாற்றத்திற்கும் பில் கேட்ஸ் அவர்களின் தனிமனிதத் திறமையும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினதும் பங்கும் அளப்பரியது. பொருளாதாரத் துறையை எடுத்துக்கொண்டாலும் இன்றைய உலகின் "பொருளாதாரத் தந்தை" என்று பில் கேட் அவர்களையே குறிப்பிடலாம் என கூறுவோரும் உளர்.

பில் கேட்ஸ் எழுதிய நூல்கள்



பில் கேட்ஸ் எழுதிய நூல்கள்பில் கேட்ஸ் "கொலின்ஸ் எமிங்வே" (Collins Hemingway) என்பவரும் சேர்ந்து எழுதிய “Business @ the speed of Thought” எனும் நூல் 25 மொழிகளில் வெளியாகி பெரும் பறப்பறப்பை ஏற்படுத்தியது. இந்நூல் பல பத்திரிக்கைகளினதும் சஞ்சிகைகளினதும் பாராட்டுக்களை பெற்றது. பில் கேட்ஸின் “The Road Ahead' எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு அதுவும் பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில், தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு தொழிலதிபராக மட்டுமன்றி, எழுத்துலகிலும் தடம் பதித்தவர் பில் கேட்ஸ்.



இந்நூல்கள் மூலம் இவர் பெற்ற இலாபத்தை தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும், இலாப நோக்கற்று இயங்கும் நிறுவனங்களிற்கும் நன்கொடையாகக் கொடுத்தார்.இவற்றைத் தவிர உலகம் முழுவதும் வாழும் மக்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திக்கான நிறுவனம் ஒன்றைத் திறந்து அதற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு பணியாற்றியும் வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிறுவனத்திற்கு "பில் எண்ட் மெலிண்டா கேட் பவுண்டேசன்” எனப் பெயரிட்டுள்ளார். "மெலிண்டா" என்பது இவரது துணைவியாரின் பெயராகும்.

மௌனம்

>> Wednesday, September 22, 2010

மௌனம் தன்னை மௌனம் என்று எப்போதும் சொல்வதில்லை.

நான்

'இறைவனுக்கு நான் ஒரு பெரிய கோயில் கட்டினேன்'

என்னும் போது அங்கே

'நான்' என்பதே பிரம்மாண்டமாக நிற்கிறது.

அறியாமை

அறியாமை அன்பு செலுத்தும். அறிவு ஆதிக்கம் செலுத்தும் .
பல இடங்களில் அறிவை விட அறியாமையே போற்றப்படுகிறது.

ஞானம்

அறிவுக்கோ , விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம்.
தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்.
தெரிந்ததாக வேடம் போடாதே.
சகிப்புத் தன்மையே ஞானத்தின் திறவுகோல்.
சகிப்புத் தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.

இரவல் அறிவு

கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

Words of jesus

தன்னைப் போல் பிறரையும் நேசி.

எதனால் அளக்கிறோமோ அதனால் தான் நாமும் அளக்கப் படுகிறோம்.

தேடுதல்

கண்கள் குருடாகலாம். ஆனால் கருத்து குருடாகக் கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

இயல்பாக இரு

விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு. தேவை கடலளவு, கிடைப்பது கையளவா? கையையே கடலாக நினைத்துக் கொள்.

மதம்

மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை. மனிதத் தன்மை மறந்த மதம் வெறும் யானையின் மதமே.

காலம்

யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும், காலம் நின்று விடுவதில்லை.

காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்சனங்கள் என்பது அவரவர் கண்ணோட்டமே.

மக்கள் என்றும் உண்மையை விரும்பவில்லை அற்புதத்தைதான் விரும்புகின்றனர்

>> Sunday, September 19, 2010

சார்லின் சாப்ளின் வாழ்ந்த காலத்தில் யார் சார்லின் சாப்ளின் போல் நடிகிறார்களோ அவர்களுக்கு பரிசுக்கள் வழங்கப்படும் என்று ஒரு விழா நடைபெறுகிறது எல்லாரும் சார்லின் சாப்ளின் போல் பிரமாதமா நடித்தார்கள். இதில் நிஜ சார்லின் சாப்ளினும் கலந்து கொண்டார். ஆனால் அவருக்கு இரண்டாம் பரிசுதான் கிடைத்தது...

கடவுளே இங்கே நேரில் வந்து நான் தான் கடவுள் என்றால் யாரும் நம்ப தயாரில்லை ஏனென்றால் மக்கள் என்றும் உண்மையை விரும்பவில்லை அற்புதத்தைதான் விரும்புகின்றனர்.

ஆசையே துன்பத்திற்கு காரணம்

"ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்று ஏன் சொன்னார் புத்தர்.... ????

ஞானிகளின் பல உண்மைகள் பல கருத்துகளை உள்ளடக்கிதான் வரும்....வார்த்தைகளின் பொருளை மேலோட்டமாக பார்ககும்போது . அதன் ஆழத்தை உணராமல் போய்விடுகிறோம்.....தண்ணிரீலே எண்ணெய் கலக்கும் போது எண்ணெய் கலக்காமல்தான் இருக்கும். அதுபோல் ஆசைபட்டாலும் அந்த ஆசை ஆசையாகவே இருக்கவேண்டும். நம் வாழ்வை ஆசை என்றும் சீர்குளைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தாமரை இலையில் என்றுமே ஒட்டாத தண்ணீர் போல் இருக்கவேண்டும். அப்படி நம் வாழ்வில் ஓட்டினால் புத்தர் சொன்னதுபோல் "ஆசையே துன்பம் ஆகிவிடும்". அப்படி ஒட்டாமல் இருப்பது நமக்கு கஷ்டம்தான்...முயற்சி செய்தால் முடியும் அதற்கு நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்யும் போதும் விழிப்புணர்வுடன் கவனித்தால் ஆசை ஒட்டாமல் இருக்கும். இதற்கு உங்களுக்கு தியானம் மிகவும் துணைபுரியும்...தினமும் 20 நிமிடம் தனியாக அமர்ந்து கண்ணை மூடி உங்கள் மனதில் உண்டாகும் எண்ணங்களை விழிப்புடன் கவனித்தலே போதும்....உங்கள் கேள்விக்கான விடைகள் ஒன்றன் பின் ஒன்றாக தெரியவரும்....ஒருநேரத்தில் கேள்விகள் எல்லாம் சென்று வெறும் மௌனம் ஒன்றே உங்களிடம் இருக்கும்...அதுவே இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தியின் மூலாதாரம்...அதுவே ஓங்காரம்....அதுவே நீங்கள்.
இந்த பிண்டத்தில் உள்ளதே அண்டம்....

ஆன்மீகவாதி என்றால் முற்றிலும் துறந்தவர????

>> Saturday, September 18, 2010

ஆன்மீகவாதி என்றால் முற்றிலும் துறந்து சாமியார் போல உள்ளவன் என்று பலர் நினைத்துக்கொண்டிருகின்றனர்.கண்டிப்பாக அது உண்மை இல்லை

உங்களை நீங்களே நன்றாக தெரிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பதே உண்மையான ஆன்மிகம்.உங்கள் உணர்வுகளை அடக்கி ஆளாதீர்கள்

அட ஆன்மீகமா அது நமக்கல்ல என்று இருக்காதிர்கள்..வாழ்வை துறப்பதல்ல ஆன்மிகம் வாழ்வை அனுபவிப்பதே உண்மையான ஆன்மீகம்.

தமிழக அரசு பேருந்தில்

>> Friday, September 17, 2010

தமிழக அரசு பேருந்தில் பயணம் சென்றால் திருக்குறளை மிஞ்சிய ஒரு வாசகம் பார்க்கலாம் அது யார் எழுதுனா என்று நீங்காளே கண்டுபிடிச்சிகிங்கோ அவ்வாசகம்...

" நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது...நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும்" என்று இருக்கும்.

ஏன், நாம் என்பதற்கு பதில் "நாங்கள்" என்று சொன்னால் கூட உதடுகள் ஒட்டாதே..."நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும்" இது யாரை ஏமாத்துற வேல ஒற்றுமை என்ற பேருல ஓட்டுக்காக மொத்தமா உட்காரவச்சு கும்மியடிக்கிற வேலை......

தன்மானம் இழந்த தமிழனுக்கு பழமொழில கூட பாசாங்கான வார்த்தைகள்தான் வெளிபடுகிறது.ஆமா இதை யாரு எழுதினா என்று சொல்லலியே...
ஒரு டிப்ஸ் தரேன் கண்டுபிடியுங்க...காலையில டிபன் சாப்பிட்டு மத்தியானம் சாப்படுவரை உண்ணாவிரதம் இருந்த ஒரு உத்தமர்...?????

படிக்காதவன் கண்டுபிடித்ததைதான் பல பல்கலைகழகங்களில் ஆய்வக படிப்பாய் இருக்கிறது



இன்று உலகத்தில் படிக்காதவன் கண்டுபிடித்ததைதான் பல பல்கலைகழகங்களில் ஆய்வக படிப்பாய் இருக்கிறது. இதில் அறிவாளியை விட புத்திசாலி சிறந்தவனாக என்றும் இருக்கிறான்....சினிமா படம் பார்க்க அதிகம் பேரு வருவாங்க ஆனா நல்ல தரமான எடுக்க படைப்பாளிகள்தான் குறைவு...பள்ளி படிப்பு சரியாக படிக்காத தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்ப கண்டுபிடிச்சாரு ஆனா அவருக்கு பின்னாடி வந்தவங்க ஏற்கனவே கண்டுபிடிச்ச பல்ப இன்னும் கண்டுபிடிச்சு அதை பிரகாச படுத்தினாங்க....இது ஒன்றும் பெரிய சாமர்த்தியம் இல்லை. அடித்தளம் யார் இட்டார்கள் என்பதை பார்க்கவேண்டும். அதனால நான் ரொம்ப படித்தவன் ph.d முடித்தவன் B.E எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் முடித்தவன் என்று சொல்லிகொள்வதில் என்ன பெருமை வேண்டிருக்கு அடித்தளம் இட்டவன் உனக்கு முன்னே இருக்கிறான். அதற்கு நீ ஒரு மெருகூட்டினார் அவ்வளவே...! படிக்காத காமராஜ் நாட்டுக்கு அதிகம் செய்தார் என்று சொல்றாங்க ஆனா அவரு படித்திருந்தால் இன்னும் என்னயென்னலாம் செய்துருப்பாரு என்று பல பேரு சொல்றாங்க அவரு படித்திருந்தாலும் செயரதான் செய்திருப்பாரு இதில் ஒன்றும் பெரிய அற்புதம் நடந்திருக்காது...நான் கேட்கிறேன், ரொம்ப படித்த அறிவாளிகளெல்லாம் நாட்டுக்கு என்ன அப்படி பெருசா சாதனை பண்ணிடாங்க, சமுதாயத்தில் என்ன ஒரு பெரிய விழிப்புணர்வா உண்டாக்கிட்டாங்க.... ஆராய்ந்து பார்த்தால் ஒன்றும்மில்லை...அப்படி அவர்கள் ஏதும் செய்திருந்தால் ஏற்கனவே செயததுடைய மிட்சமாகத்தான் அச்சாதனை இருக்கும்...படைப்பாளி என்றும் படைப்பாளிதான் அவன் புத்தி அறிவுக்கு என்றும் ஈடாகாது....அதனால் ஒருவருடைய படிப்பை மட்டும் வைத்து புத்தியின் திறமையை தவறா எடைபோடகூடாது. பலகலைகழகங்களில், நாலு பேரு உட்கார்ந்து மார்க்கு போட்டு நீ நல்லா படித்த அறிவாளி என்று சொல்லி, கைல ஒரு பட்டத்தை கொடுத்தால் நாம் அறிவாலியா.... நம்ம அறிவு நமக்கு தெரியாத அறிவு எனபது ஏற்கனவே அறிந்ததை அறிவது.....ஆனால் புத்தி எனபது அறியாததை அறிவது......இதுதான் என் புத்தியின் அறிவு.....பதிவை பொறுமையாக படித்தற்கு மிக்க நன்றி...!
Add a caption
இன்று உலகத்தில் படிக்காதவன் கண்டுபிடித்ததைதான் பல பல்கலைகழகங்களில் ஆய்வக படிப்பாய் இருக்கிறது. இதில் அறிவாளியை விட புத்திசாலி சிறந்தவனாக என்றும் இருக்கிறான்....சினிமா படம் பார்க்க அதிகம் பேரு வருவாங்க ஆனா நல்ல தரமான எடுக்க படைப்பாளிகள்தான் குறைவு...பள்ளி படிப்பு சரியாக படிக்காத தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்ப கண்டுபிடிச்சாரு ஆனா அவருக்கு பின்னாடி வந்தவங்க ஏற்கனவே கண்டுபிடிச்ச பல்ப இன்னும் கண்டுபிடிச்சு அதை பிரகாச படுத்தினாங்க....இது ஒன்றும் பெரிய சாமர்த்தியம் இல்லை.
அடித்தளம் யார் இட்டார்கள் என்பதை பார்க்கவேண்டும். அதனால நான் ரொம்ப படித்தவன் ph.d முடித்தவன் B.E எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் முடித்தவன் என்று சொல்லிகொள்வதில் என்ன பெருமை வேண்டிருக்கு அடித்தளம் இட்டவன் உனக்கு முன்னே இருக்கிறான். அதற்கு நீ ஒரு மெருகூட்டினார் அவ்வளவே...!
படிக்காத காமராஜ் நாட்டுக்கு அதிகம் செய்தார் என்று சொல்றாங்க ஆனா அவரு படித்திருந்தால் இன்னும் என்னயென்னலாம் செய்துருப்பாரு என்று பல பேரு சொல்றாங்க அவரு படித்திருந்தாலும் செயரதான் செய்திருப்பாரு இதில் ஒன்றும் பெரிய அற்புதம் நடந்திருக்காது...
நான் கேட்கிறேன், ரொம்ப படித்த அறிவாளிகளெல்லாம் நாட்டுக்கு என்ன அப்படி பெருசா சாதனை பண்ணிடாங்க, சமுதாயத்தில் என்ன ஒரு பெரிய விழிப்புணர்வா உண்டாக்கிட்டாங்க.... ஆராய்ந்து பார்த்தால் ஒன்றும்மில்லை...அப்படி அவர்கள் ஏதும் செய்திருந்தால் ஏற்கனவே செயததுடைய மிட்சமாகத்தான் அச்சாதனை இருக்கும்...
படைப்பாளி என்றும் படைப்பாளிதான் அவன் புத்தி அறிவுக்கு என்றும் ஈடாகாது....அதனால் ஒருவருடைய படிப்பை மட்டும் வைத்து புத்தியின் திறமையை தவறா எடைபோடகூடாது.
பலகலைகழகங்களில், நாலு பேரு உட்கார்ந்து மார்க்கு போட்டு நீ நல்லா படித்த அறிவாளி என்று சொல்லி, கைல ஒரு பட்டத்தை கொடுத்தால் நாம் அறிவாலியா.... நம்ம அறிவு நமக்கு தெரியாத
அறிவு எனபது ஏற்கனவே அறிந்ததை அறிவது.....ஆனால் புத்தி எனபது அறியாததை அறிவது...........

OSHO







ரமணர்


தனக்காக வாழும் நெஞ்சங்கள் பலப்பேர் பிறருக்காக வாழ்பவர்கள் சிலபேர். "வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் என் மனம் வாடியது" என்று வள்ளலார் கூறினார். நீங்கள் மனித உயிர்கள் படும் அவலங்களை எண்ணி வேதனை கொள்கிறீர்கள். ஆனால் ஒரு சிறு எறும்பு கூட தன்னால் துன்புறுக கூடாது என்று பல சரித்திர நாயகர்கள் இருந்தனர். அவர்களுள் புத்தர், ஒரு வேடன் வேட்டையாடிய மானை விடிவித்து மானை கற்றிய கயற்றினில் தன் கழுத்தை கட்டிக்கொண்டு இருந்தார். வேடன் இதை கண்டு மனம் வேதனை கொண்டு புத்தரின் வழியை பின்பற்றினான். இதேபோல் ரமணர் ஒருமுறை வழக்கமாக நடந்து சொல்லும் பாதையில் எறும்பு புற்றை மிதித்து விட்டார். எறும்புகள் களைந்து அவற்றின் இருப்பிடமே கலைந்துவிட்டது. அதை எண்ணி ரமணர் மிகவும் வறுத்தமுற்று என்னால் தான் இவ்வேரும்புகள் துன்புற்றன என எண்ணி அவைகள் தன்னை கடிக்கட்டும் என்று எறும்பு புற்று அருகிலே கால்களை வைத்திருந்தார். கால்கள் மிகவும் ரணமாகி வீக்கமுடன் நடக்கமுடியாமல் இருந்தார். உயிர்கள் துன்புறுவதை வேதனைகொண்டு உணர்வதில் நம்மை விட ஒரு படி மேல்நிலையிலே இருந்தனர். அம்மேன்மக்கள்...

When will it go from the Earth.... Oh my god...

>> Wednesday, August 25, 2010


Politics of Corrupted MK

பகவத்கீதை - செயல்முறை விளக்கம்

தேவையான பொருட்கள்

1. கண்ணாடி தம்ளர்.
2.கைப்பிடிக்கும் குறைவான மண்.
3.நீர்.
4.கொஞ்சம் கவனம்.


செயல்முறை.
கண்ணாடி தம்ளரை ஒரு மேசையின் மீதுவைக்கவும்.அதில் முக்கால் பங்கிற்கு நீரை ஊற்றவும்.எடுத்துவைத்திருக்கும் மண்ணை அந்த தம்ளரில் நீர் வெளியே தளும்பாமல்கொட்டவும்.
விளைவு;

1. நீர் உடனடியாக கலங்கிவிடும். தன் நிலையிலிருந்துமாறி அழுக்காகிவிடும்.தன்னுள் வந்த் வெளிப்பொருளான மண்ணின் தன்மையை நீர் ஏற்றுக்கொள்ளும்.
2.எவ்வளவு நேரம் முடியுமோ அந்த தம்ளரையே கவனிக்கவும்.
3.ஒரு நிலையில் தன்னுள் விழுந்து தன்னை அழுக்காக்கிய மண்ணை தன்னுள்ளேயேவைத்துக்கொண்டுதண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் தெளியதுவங்கும்.
4.ஒரு நிலையில் தன்னுள்ளேயே தனக்கடியில் மண்ணை வீழ்த்திவிட்டு தண்னீர்தன் பழையதூய நிலையை எட்டி இருக்கும்.

பாடம்.
உன்னுள் தோன்றும் கச்மலமாகிய எண்னத்தை கவனி.சுய உபதேசிப்பு துவங்கிவிடும் . அப்படி துவங்கிவிட்டால் அழுக்கை மீறி நம்தூய்மை எழுந்து நிற்கும்.

கல்வி மதத்துக்க ? இல்லை குழந்தைக்க?

>> Monday, July 26, 2010

இந்தியன் என்று சொல்லி கொள்வதில் தலை குனிகிறேன்

பள்ளி போய் வா
படித்து அறிந்து வா
உழைக்க கத்துக்கோ
வரும் உலகம் உனக்குத்தான்.
கல்வி என்றும்தான் கற்க வேணுமே
ஆளும் நீயும்தான் வளர வேணுமே
உன் அறிவும் நாளும்தான் சிறக்க வேணுமே
அன்பை பேதமின்றி நீ காட்ட வேணுமே


எந்தன் பாரதி சொன்ன கவி ....

நான் இந்துவாம் எனக்கு இல்லை உதவி தொகை ....
என்னுடன் படிக்கும் கிறிஸ்டியன் , முஸ்லிம் இருவர் கும் உதவி தொகை ....
எனக்கு இல்லை ஏன் ? நான் இந்துவாம்...
என் பிஞ்சு மனதில் நஞ்சு விதைக்குறய்
சுரண்டும் சுப்பன்கள்
சுகமாய் இருக்க நடத்த படும் சதி

"பள்ளீச் சீருடை போட்டுக்கோ
பையை தோளில் மாட்டிக்கோ"

பாரதி தந்த கவி...இது எனக்கு கனவு கவி

.....

Our Amazing Planet : Top To bottom

>> Thursday, July 8, 2010

பாரத நாடு--- India....

>> Monday, July 5, 2010

* அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

* பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

* வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

* பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும்,தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

* ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

* நாம் அணியும் ஊள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கற்களும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

* நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.

* மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

* கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

* பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

* குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!


இந்த நிலை மாறுவது எப்போது?
தூங்கும் பாரதமாதவைத்தான்(?) எழுப்பிக் கேட்க வேண்டும்!

>> Friday, May 28, 2010

தாய்........அம்மா............"தாய்மை"

>> Sunday, May 16, 2010

உணரவில்லை முழுமையாக
இந்த வார்த்தையை நான்
தாயாகும் வரை....

அத்தனை வலியையும் மீறி
பிஞ்சு மழலையை என்னிருகை
ஏந்தியபோது எதுவுமே உணரவில்லை...

பேரின்பத்தை தவிர,

முன்பெல்லாம் எண்ணுவேன்
பெண் ஜென்மமே பாவப்பட்டதென......
இப்போது வருந்துகிறேன் அதற்காக......




என் மகன் தந்த முத்தத்தில்
பட்ட எச்சில் துளியில்
தெரிகிறது என் சொர்க்கம்.....

எனக்கான காரணங்கள்

>> Monday, May 10, 2010

எனக்கான காரணங்கள் எதுவுமின்றி...
அழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்...
முகமூடிகள் அணிந்து அணிந்து...
மறந்துவிட்டேன்...
என் முகம் எதுவென...
எனக்கான காரணங்கள் எதுவுமின்றி...
அழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்...
முகமூடிகள் அணிந்து அணிந்து...
மறந்துவிட்டேன்...
என் முகம் எதுவென...

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!

>> Saturday, May 1, 2010

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!

தொண்ணுறு நிமிடங்கள் தொட்டு அணைத்த காலம் தான்!
எண்ணுறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி!

பார்வையிலே சில நிமிடம்! பையத்தோடு சில நிமிடம்!
கட்டி அணைத்த படி கண்ணிரில் சில நிமிடம்!
இலக்கணம்மே பாராமல் எல்லா இடங்களில் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!


எது நியம் எது பாவம் இருவருக்கும் தோண்றவில்லை!
அது இரவா அது பகலா அதுபத்தி அறியவில்லை!
யார் தொடங்க! யார் முடிக்க ! ஒரு வழியும் தோண்றவில்லை!
இருவருமே தொடங்கி விட்டோம்! இதுவரைக்கும் கேள்வி இல்லை!
அச்சம் கலைந்தேன்! ஆசையில் எனை நீ அணைத்தாய்!
ஆடை கலைந்தேன்! வெட்கத்தை நீ அணைத்தாய்!


கண்ட திரு கோலம் கனவாக மறைந்தாலும்!
கடைசியில் நீ அழுத கண்ணீர் இன்னும் கையில் ஓட்டுதடி!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!

சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டோ இருங்க

>> Monday, March 29, 2010

1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..

“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....




2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...

மாணவர்கள்: புரியல சார்...



3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?

டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.



4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.

அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா



5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.

மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)

கணவன்: அது ஒரு இறந்த காலம்....



6) தேர்வு அறையில்...

மாணவன்: ஆல் தி பெஸ்ட்!

மாணவி: ஆல் தி பெஸ்ட்!

மாணவன் பெயில்....

மாணவி 80%நீதி:

நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)



7) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?

பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..

நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..



8) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...

முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...

இப்ப சொல்லுங்க...

என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?]



9) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?

லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...

எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?



10) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?

மனைவி: பல்லி விழும் பலன்...

கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?

மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...



11) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க..

நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....

ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....

நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....

ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?



12) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”



13) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?
* J to the A to the V to the A --- JAVA* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும். * C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++



14) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)

1. படிப்பு

2. விளையாட்டு

3. பொழுது போக்கு

4. காதல்

5.

6.

7.

ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...!

இதுக்கு பதில் சொலுங்க

>> Monday, March 15, 2010

வளர்குறது நீங்க! அப்புறம் எவனது மாட்டின! நார் அடிக்க வேண்டியது!

இதுக்கு பதில் சொலுங்க ..............
என்ன கொடுமை சார் இது .....

தமிழா!

>> Thursday, February 18, 2010

வந்தவனை எல்லாம் வாழ வைத்த தமிழா!
நீ தோன்றி 50000 ஆண்டுகள் (மொழி தோன்றி 50000 ஆண்டுகள் )

ஆனால் கேவலம்!!
உனக்கு என்று ஒரு நாடு இல்லை
நீ வாழ வைக்கிறவனாம்.. ஆம் உண்மை ஆனால்
நீ வாழ வைத்தவன் உன் மார்பில் குத்துகிறன்
ரணமாக ஆகி போனாய் நீ .....

காணோம் !!
மணித நேயம் பத்தி பேசுகிறவனை - அவன்
தமிழ் இன படுகொலை பார்த்தனா- இல்லை ! இல்லை !
செத்துவிட்டான்

தமிழனை பத்தி புரியதவனை !!!!!!
புரிந்து கொள் ...
என் மொழி எழுத்து 247
அதில் ஆயுத எழுத்து ஒன்று
எழுத்துலை ஆயுத எழுத்தை கொண்டவன் ...
தமிழன் ஆயுதம் எடுத்தால் நீயும் உன் ..............
தமிழன் சொல்லமாட்டான்

படைத்தவன் நீ........ யாட

படைத்தவன் நீ........ யாட .... கால .....
என்னை அழிக்கும் (அளைக்கும் ) நாளை சொல்லுட ....

என் உயிர் உள்ள வரை....

>> Monday, February 15, 2010

என் உயிர் உள்ள வரை....
எனக்கு நீ துணையாக வருவாய் என்று...
என் உயிரை... உனக்காக
கண்களில் கண்னிருடன்......

ஏ பெண்ணை !

ஏ பெண்ணை !
என் இதயத்தில் இடம் உனக்கு என்றேன்...
ஏறி மிதிக்க அல்ல!
என் இதயமும் உன் இதயமும் ஒட்டி உறவாட .........

உங்களில் ஒருவனாக

>> Sunday, February 14, 2010

எனது தூக்கத்தை பறித்து கொண்டு...
என்னையே காவல் வைக்கிறீர்கள்..
உங்கள் கனவுகளுக்கு...

எனக்கான காரணங்கள் எதுவுமின்றி...
அழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்...
முகமூடிகள் அணிந்து அணிந்து...
மறந்துவிட்டேன்...
என் முகம் எதுவென...

புனித மிச்சமும் மனித எச்சமுமாய்
கழிந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை...
ஏனென்று தெரியாமல்...
எதற்கென்று புரியாமல்...
நானும் கூட வாழ்கிறேன்...
உங்களில் ஒருவனாக.

என் உள் எழுந்த கேள்விகள்

>> Monday, January 18, 2010

நான் யார்?
ஏன் பிறந்தேன்?
எதறக்காக வளர்ந்தேன்?
என் விரூப்பம் இல்லாத பிறப்பு எதர்க்கு?
பிறப்பு ஏன் மரணத்தில் முடிய வேண்டும்?
பிறப்புக்கு மரணம் உண்டு என்றல் கடவுள் என்று நீ எதர்க்கு?
பாவததுக்கு மரணம் என்றல் பாவம் எப்படி வந்தது?
படைத்தது நீ என்றல் பாவம் எப்படி வரலாம்?
உன் திருவிளையாடல் என்றால் முதலாவதாக உன்னால் படைக்கப்பட்டவன் என்ன பாவம் செய்தான் ?
உண்மையில் நீ இருந்தால் ஒருவன் தானே?
உன் பெயரில் எத்தனை பிரிவுகள்? அது ஏன் ?

இதற்கு எல்லாம் பதில் எப்போது .................

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP